Wednesday, August 30, 2017

இது, இதுதான் இந்தியா, புரியுதா சங்கிகளே!


இறைவனிடம் கையேந்துங்கள்!!!

இறை நம்பிக்கை இல்லாத போதும் நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீரக் குரலில் ஒலிக்கும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சில வாரங்களுக்கு முன்பாக கீழே உள்ள காணொளி வாட்ஸப்பில் வந்தது. விட்டல்தாஸ் என்பவர் தனது பஜனையில் இப்பாடலைப் பாடியதாக காணொளியோடு வந்த செய்தி சொன்னது. 

நிஜமாகவே அது பஜனையில் பாடப்பட்டதா அல்லது நாகூர் ஹனீபா அவர்களின் பாடலை வைத்து மிக்ஸிங் செய்யப்பட்டதா என்று ஒரு சந்தேகம் கூட வந்தது. எனக்கு அனுப்பியவருக்கும் அதே சந்தேகம் இருந்தது. 

கொஞ்சம் மெனக்கெட்டு இணையத்தில் தேடிய போது திரு விட்டல்தாஸ் அவர்கள் பஜனையில் பாடிய பாடல்தான் என்பது தெரிய வந்தது. 

இஸ்லாமிய மேடைகளில் பிரபலமான ஒரு பாடலை ஒரு இந்து மத வழிபாட்டு மேடையில் பாடுவது ஒரு சிறப்பு. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அதை ரசித்து கேட்பது என்பது இன்னும் சிறப்பு. 

திரு விட்டல்தாஸ் அவர்களின் குரலும் திரு நாகூர் ஹனிபா அவர்களின் குரல் போலவே கம்பீரமாய் ஒலித்தது என்பதையும் சொல்லிட வேண்டும். ( முதலில் நான் இதை எழுதவில்லை என்பதையும் அனானி ஒருவர் சுட்டிக்காட்டிய பின்பு இணைத்தேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.)

இதுதான் இந்தியாவின் சிறப்பு.
இதுதான் இந்தியா உயர்த்திப் பிடிக்கும் மத நல்லிணக்கம்.
ரம்ஜான் பிரியாணியும் தீபாவளி இனிப்புக்களும் பறிமாறப் படுவதும்
இந்த பாரம்பரியத்தின் அடிப்படையில்தான். 

இதனைத்தான் வினாயகர் சிலை ஊர்வலம் போன்றவற்றின் மூலமாக சிதைக்கப்பார்க்கிறார்கள் காவிகள். 




14 comments:

  1. Vittaldas swami's voice so superb like Nagore Haniffa.
    why miss mentioning it?

    ReplyDelete
    Replies
    1. உண்மை. அவரது குரலும் கம்பீரமாக ஒலித்தது. இணைக்கிறேன்

      Delete
  2. A hindu singing a muslim song is not at all a surprise and usually a common event. On the other hand, a follower of foreign religions singing songs praising hindu gods or indian motherland is impossible. 'vande matharam' song or national anthem is a good example.

    ReplyDelete
    Replies
    1. நினைச்சேன். இப்படி கிளம்பி வருவீங்க என்று நினைச்சேன்.
      ஹிக்கின்ஸ் பாகவதரைத் தெரியுமா?
      யேசுதாஸ் இருக்கிறாரே, கேட்டதுண்டா?
      வந்தே மாதரம் சங்கிகளின் அரசியல்.

      Delete
    2. வந்தே மாதரம் தேசிய கீதமென்று பொய் சொல்லாதீர்.
      ஜனகன மண வை மற்றவர்கள் பாடுவதில்லை என்பது உங்களின்
      அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம்

      Delete
  3. எம்மதமும் சம்மதம் என்று சொல்லும் பொதுவான, இறைவன், ஆண்டவன் புகழ் பாடும் அருமையான பாட்டு இது.

    ReplyDelete
  4. அந்த பாடலில் அவர் "...அல்லல் படும் மனிதர்களே அயராதீர்கள் ஆண்டவனின் பெரருளை நம்பி நில்லுங்கள்..." என்று மாற்றி பாடுவார் (அல்லாஹ் என்பதற்கு பதில் )
    BADRINATH

    ReplyDelete
  5. தோழரின் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. In fact I remember seeing musicians with naamum in Nagoore Hanifa's band. How about that.

    AR Rahman had great Vande Madharam soundtrack

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ தானடா மத வெறி பிடித்த நாய்

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அசிங்கமா நீ வாந்தி எடுக்கறதை உன் வீட்டு குப்பைத் தொட்டியில் எடு
      இல்லைன்னா மோடியோட வாயில எடு

      Delete