Thursday, August 17, 2017

வெட்கமா? ரோஷமா? எது மோடி?

வானொலியையும் தூர்தர்ஷனையும் தங்கள் அப்பன் வீட்டு சொத்தாகக் கருதி இருட்டடிப்பு செய்யப்பட்ட, பதிவு செய்யப்பட்ட தோழர் மாணிக் சர்க்கார் அவர்களின் உரை கீழே உள்ளது.

அவர்களின் அராஜகத்தையும் அடிமைத்தனத்தையும் சுட்டிக் காட்டியதால் வெட்கமோ அல்லது ரோஷமோ வந்து தங்களின் அதிகாரத்திமிரை பயன்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

மோடியைப் போல கதை விட்டுக் கொண்டு பொய் சொல்வதைத்தான் சிலர் இன்னும் நம்புகிறார்கள் என்பது இந்தியாவின் இன்னொரு துயரம்.





பிரிட்டிஷாரின் அடிமைகளிடமிருந்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம்!

நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தினத்தன்று அந்தந்த மாநிலத்தின் முதல்வர்களும் மாநிலத்தில் உள்ள அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் வாழ்த்துச் செய்தியைக் கூறுவார்கள். இந்த ஆண்டும் அதே போன்று திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், வாழ்த்துச் செய்தி கூறி அவற்றை நிலையத்தார் பதிவு செய்தும் வைத்திருந்தார்கள். ஆயினும் சுதந்திர தினத்தன்று அதனை ஒலிபரப்பிட நிலையத்தார் மறுத்துவிட்டார்கள். அதன் நகலை புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தில்லியில் செய்தியாளர்களிடையே வெளியிட்டார். 

மாணிக் சர்க்காரின் ஒலிபரப்பப்படாத உரை இது.

அன்பார்ந்த திரிபுரா மக்களே, சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் உரித்தாக்கிக்கொள்கின்றேன். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் மாபெரும் நினைவுக்கு என் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன். இப்போதும் நம்மிடையே இருந்துவரும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது என்பது வெறுமனே ஒரு சடங்கு அல்ல. 

அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அதனுடன் நாட்டு மக்களுக்கு உள்ள உணர்வுப்பூர்வமான பிணைப்பை மனதில்கொண்டு தேசிய அளவிலான ஒரு முக்கியமான விழாவாக சுதந்திர தினம் கருதப்படுகிறது.இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நாம் நினைவுகொள்ளவேண்டிய சில முக்கியமான மற்றும் சமகாலத்திய பிரச்சனைகள் இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு என்பது நம் நாட்டின் பாரம்பரிய மரபாகும். நாம் கடைப்பிடித்துவரும் மதச்சார்பின்மையின் மாபெரும் மாண்புகள், நாட்டு மக்கள் அனைவரையும் ஒரு தேசமாக ஒருங்கிணைப்பதற்கு உதவி இருக்கிறது. 

ஆனால், இன்றைய தினம் இத்தகைய மதச்சார்பின்மை என்னும் மாண்பு மாபெரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.சமூகத்தில் மக்கள் மத்தியில் சிக்கல்களையும், பிரிவினையையும் உருவாக்கக்கூடிய விதத்தில் விரும்பத்தகாத சக்திகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.




மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் தேச ஒற்றுமை உணர்வினை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக சிறுபான்மையினரும், தலித்துகளும் கடும் தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு என்பது சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வாழ்வு கடும் அபாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய போக்குகளை சகித்துக்கொள்ள முடியாது. 


இத்தகைய சீர்குலைவாளர்களின் முயற்சிகள் என்பவை விடுதலைப் போராட்டத்தின் உன்னதமான லட்சியங்களுக்கும், கனவுகளுக்கும் எதிரானவைகளாகும். இதனைப் பின்பற்றுவோர் சுதந்திரப் போராட்ட இயக்கத்துடன் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்களாவார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், பிரிட்டிஷாருக்கு அடிமையாக இருந்து சேவகம் செய்தவர்கள். 

இத்தகைய தேச விரோத சக்திகள்தான் இன்றையதினம் பல்வேறு பெயர்களில் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அடிப்படையாக இருக்கும் ஆணிவேரையே வெட்டிச் சாய்த்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிட நாட்டின்மீது பற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இந்நன்னாளில் உறுதி எடுத்துக்கொள்வோம். 

நாட்டைப் பிளவுபடுத்த முயலும் இத்தகையவர்களின் நாசகரமான சதி வேலைகளை முறியடித்திட இந்நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம். சிறுபான்மையினர், தலித்துகளின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்திடவும், இந்நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம் .இன்றைய தினம் இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையேயான இடைவெளி விரிவாகிக் கொண்டிருக்கிறது. நாட்டின் செல்வங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரின் கைகளில் குவிந்துகொண்டிருக்கின்றன. 

பெரும்பான்மையான மக்கள் வறுமைக்குழிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் மனிதாபிமானமற்றமுறையில் அவர்கள் சுரண்டப்படுகின்றனர். இவர்களுக்கு உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் விடுதலைப் போராட்டத்தின் குறிக்கோள்களுக்கும், லட்சியங்களுக்கும் எதிரானவைகளாகும். இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். வெறும் வார்த்தைகள் இதனைச் செய்திடாது. இவற்றை அடைந்திட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அச்சமின்றி போராட முன்வர வேண்டும். 

நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களைக் காத்திட நிச்சயமாக ஒரு மாற்றுக்கொள்கை நமக்குத் தேவை.இத்தகைய மாற்றுக் கொள்கையை எதார்த்தமாக்கிட இந்த சுதந்திர நன்னாளில் உறுதி ஏற்போம். பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இயக்கத்தினை விரிவான முறையில் கட்டி எழுப்பிட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக மாறி இருக்கிறது. ஒரு பக்கத்தில் லட்சக்கணக்கானவர்கள் வேலைகளிலிருந்து   நீக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் கோடிக்கணக்கானவர்கள் வேலை கேட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவராமல் இதற்குத் தீர்வு காண முடியாது. இதற்கு நம் மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு நின்று நாசகரமான இக்கொள்கையை முறியடித்து மாற்றுக் கொள்கையை உருவாக்கி முன்னேற இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.

திரிபுராவின் எதிரிகள்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக திரிபுரா மாநில அரசு தனக்கிருக்கிற குறைந்தபட்ச அதிகாரங்களைக்கொண்டு மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இது நாட்டில் ஒட்டுமொத்தமாக வித்தியாசமான மாற்றுப் பாதையாகும். இது திரிபுரா மக்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை ஏற்படுத்தி இருக்கிறது. 

எனவே மக்களின் எதிரிகள் திரிபுரா மாநில மக்கள் மத்தியில் நிலவும் இத்தகைய சகோதரத்துவத்தையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்திட பல்வேறுவிதமான சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நம் வளர்ச்சிப் பணிகளையும் சீர்குலைத்திடவும் முயற்சித்து வருகிறார்கள். இத்தகைய இவர்களின் புனிதமற்ற சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இந்தப் பின்னணியில் திரிபுராவின் அமைதியை விரும்பும் மக்கள் அனைவரும் இத்தகைய சீர்குலைவு சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.

6 comments:

  1. evil communists own china radio for anti-national propaganda.

    ReplyDelete
    Replies
    1. புதுசா ஏதாவது சொல்லு தம்பி. திரும்பி திரும்பி சீனான்னே வாந்தி எடுக்காதே.
      அவர் பேசியதில் எதுக்காவது பதில் சொல்ல துப்பு இருக்கா?

      Delete
    2. avarey
      soltaar
      chinaaa naaa
      vaaaaanthinu...

      vitudungaji....
      paavam...

      Delete
    3. நீ ஒரு முட்டாள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறாயே கோழை அனானியே

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete