Saturday, September 16, 2017

எச்.ராசாவை தோற்கடியுங்கள்

உடலெங்கும் மனமெங்கும் விஷமேறிப் போய், ஒவ்வொரு வார்த்தையிலும் நச்சை மட்டுமே வெளிப்படுத்துகிற சமூக விரோதி, மக்கள் விரோதி, அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாதி எச்.ராசா, சாரணர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறாராம். 

வாக்களிக்கும் தகுதி படைத்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். 

மனிதன் அல்ல, மிருகம் என்று கூட சொல்ல முடியாத இந்த மோசமான பிறவியை தோற்கடியுங்கள்.

மாணவர்களை வழிநடத்தும் மகத்தான பொறுப்பிற்கு இந்த இழிபிறவியா?

இன்றைய தீக்கதிர் கட்டுரை, எச்.ராசா ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை விரிவாக விளக்குகிறது.



 சாரணிய இயக்க தலைமை ஏற்க எச். ராஜாவுக்கு அருகதை உள்ளதா?
திருவாரூர், செப்.15-

தொண்டுள்ளத்தையும், நல்லொழுக்கத் தையும் மாணவப் பருவத்திலிருந்தே வளர்த்தெடுப்பதுதான், ஸ்கவுட் எனப்படும் சாரணிய இயக்கத்தின் நோக்கம். இந்த உன்னத நோக்கங்களுக்கும், மதவெறியைக் கிளப்பி கலவரத் தீ மூட்டும் ஆர்எஸ்எஸ் பேர்வழி எச். ராஜாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஆனால், கள்ளங் கபடமற்ற குழந்தைகளின் உள்ளத்திலும் மதவெறி விஷத்தை ஏற்றுவதற்காக, தமிழக சாரணிய இயக்கத்தையே கைப்பற்றும் சதித் திட்டத்துடன், அதன் தலைவர் பதவிக்கு எச். ராஜா போட்டியிடுகிறார். 

சாரணிய இயக்கத்தின் மாட்சிமை காப்பாற்றப்பட வேண்டுமானால், எச். ராஜா தோற்கடிக்கப்பட்டாக வேண்டும்.1907-இல் பேடண்ட் பவல் என்பவரால் பிரிட்டனில் உருவாக்கப்பட்ட மாணவர் தொண்டு அமைப்புதான் ‘ஸ்கவுட்’ எனப்படும் சாரணியம் இயக்கம். அநேகமாக உலகநாடுகள் அனைத்தி லும் கல்வி நிறுவனங்கள் தோறும் இந்த சாரணியர் படை அமைப்புகள் உள்ளன. துவக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சிறுவர்கள், குழந்தைகள், மாணவர்களை கொண்ட பேரியக்கமாக சாரணிய இயக்கம்வளர்ந்தது. இந்தியாவில் 1909-இல் பெங்களூரு பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட சாரண - சாரணியர்இயக்கம் பின்னர் நாட்டின் அனைத்துப் பள்ளிகளுக்கும் கிளை விரித்தது. 

சாரணிய இயக்கம் உலகளாவிய மாணவர் - இளைஞர் பேரியக்கமாக வளர்ந்திருந்தாலும், அந்தந்த நாடுகளின் சமூகச் சுழல் மற்றும் இறையாண்மைக்கேற்ப சில நோக்கங்கள் திட்டங்களையும்- தேவையான மாற்றங்களையும் தன்னகத்தே சுவீகரித்துக் கொண்டு இயங்கி வருகின்றன.பல்வேறு இன, மொழி, மதங்களால் பின்னப்பட்ட அழகிய தேசமான இந்தியாவில், அதன் தனிச்சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் அடிப்படையிலான இறையாண்மையையும் உள்வாங்கியே சாரணிய இயக்கம் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் ஆக்கப்பூர்வமான; பாத்திரத்தை வகிப்பதன் மூலம் இந்திய நாட்டையும், அதன் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான பணிகளில் ஈடுபடுவதே இந்திய சாரணிய இயக்கத்தின் நோக்கம் என்றால் அது சரியானதாகும். 

சாரணியம் சாரணர் பயிற்சி 

அந்த வகையில்தான், தில்லியை தலைமையிடமாகக் கொண்ட பாரத சாரணிய இயக்கத்தின் மாநில, மாவட்ட அளவிலானஇந்திய கட்டமைப்பு மற்றும் அதன் பிரிவுகள், அதன் செயல்முறைகள் அனைத்தும், மாணவர்களை இனிமையான பண்புகளைக் கொண்டவர்களாக, அவர்களை நாட்டின் எதிர்கால நல்குடிமக்களாக உருவாக்கும் நோக்கம் கொண்டவை. 

அதற்கான பயிற்சிகளை அளித்து, சமூகத்திற்கு உதவும் தொண்டுள்ளங்களை உருவாக்குகின்றன. அடிப்படை பண்பு, நல்லொழுக்கம், நாட்டுப் பற்றுடன் கூடிய பொதுநல செயல்களில் ஈடுபடும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குகின்றன. நாட்டின் ஒற்றுமைக்கான படை வீரர்களை உருவாக்குகின்றன. சமூக இடர்பாடுகளில் மக்களைக் காப்பாற்றுவது, பாம்பு, நாய் விஷக்கடிகளுக்கு முதலுதவி அளிப்பது, நோய்த் தடுப்பு முறைகளை விளக்குவது உள்ளிட்ட ஏராளமான பயிற்சிகளையும் அளிக்கின்றன. அவற்றைப் பெறும் மாணவர்கள், தங்களின் அறிவை சமூகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆகவே, இந்தியச் சிறுவர்கள் மற்றும் மாணவர்களை உற்சாகப்படுத்தி சாரணிய இயக்கத்தில் ஈடுபடுத்தி பயிற்சி அளிப்பது முக்கியமான பணியாகும்.ஏழு வயது சிறுவர்கள் முதற்கொண்டு செயல்படும் சாரணிய இயக்கம் பல பிரிவுகளை கொண்டு உள்ளது. இன்று 36 லட்சத்து 87 ஆயிரத்து 127 சாரணிய பிரிவுகளில், 56 லட்சத்து 95 ஆயிரத்து 800 சாரண - சாரணியர் உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.சாரணர் - சாரணியர்களுக்கென மூவிதழ் மலர் வடிவில் சின்னங்கள் உள்ளன. பச்சைத் துணியில் மஞ்சள் நூல் எந்திரப் பின்னலால் உருவாக்கப்பட்ட இணைப்புச் சின்னத்தை தங்கள் சீருடைகளில் சாரணிய இயக்க மாணவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இந்த மஞ்சள் வண்ணத்தை காவியாக மாற்றும் உள்நோக்கத்துடன்தான் ஆர்எஸ்எஸ் பேர்வழியான எச். ராஜா சாரணிய இயக்கத்தின் தலைமைக்குப் போட்டி போடுகிறார். இதற்கான தேர்தல் சனியன்று (செப்.16) நடைபெறுகிறது. 

மதவெறி நஞ்சை விதைக்கும்எச். ராஜா

மதவெறி மூலம் கலவரத் தீயை பற்ற வைத்து, மக்களைத் துண்டாடும் எச். ராஜா,சாரணிய இயக்கத்தின் தலைமைக்கு தகுதி யற்றவர் என்பது இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல; லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்களின் பொதுக் கருத்தாகவும் இன்று உருவாகியுள்ளது. பாசிச இந்துத்துவா கருத்தை போற்றியும், மற்ற மதங்களை இகழ்ந்து பேசியும்; மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் குணம் கொண்ட எச்.ராஜா சாரணிய இயக்கத் தலைமையை கைப்பற்ற நேர்ந்தால் சாரண - சாரணியர்களின் மென்மையான தொண்டு உள்ளங்கள் நஞ்சாக்கப்படும். மதவாத வெறுப்பு கொண்ட வேலைத்திட்டங்கள் திணிக்கப்படும். ஆர்எஸ்எஸ்-சின் காவி அணிவகுப்புக்கு ஆள்பிடிக்கும் மைதான மாக தமிழக சாரணிய இயக்கம் மாறும். மகத்தான சர்வதேச இயக்கங்களில் ஒன்றான சாரணிய இயக்கம் அதன் மாண்பை இழக்கும். சாரணிய இயக்கம் கேலிக்கூத்தாகி விடும்.

செய்தி தொகுப்பு : பி. கந்தசாமி, திருவாரூர்.

1 comment:

  1. Don't you worry sir. He has been defeated left, right, top, bottom, and center in a very telling manner. The voting authorities have proved that the saffron segregationist politics doesn't have a place in Tamilnadu. Kudos to them. I believe this is a death bell to the politican aspirations of sanghis in Tamilnadu.

    ReplyDelete