Sunday, September 17, 2017

பிரெட் பால் அல்வா -இரண்டு நேயர் விருப்பம்

நீண்ட நாட்களாக சமையல் பதிவு எதுவும் எழுதவில்லை. அதனால் சமையலறை பக்கம் போகவில்லை என்று அர்த்தமல்ல. புதிய முயற்சி எதுவும் செய்யவில்லை. அவ்வளவுதான். 

கடந்த ஞாயிறு மகனின் நேயர் விருப்பம் புதிய முயற்சிக்கு வித்திட்டது. அவன் கேட்ட பிரெட் அல்வாவை புதிய முறையில் முயற்சித்தேன். ஏற்கனவே ஒரு முறை பிரெட் பேரிச்சம்பழ அல்வா செய்துள்ளேன். பிரெட்டில் வேறு சில உணவு வகைகளும் கூட.

பார்க்காதவர்கள் இணைப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்






சரி இப்போது பிரெட் பால் அல்வாவை பார்ப்போம். 

பிரெட்டை சிறு துண்டங்களாக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் நெய் ஊற்றி வதக்கவும். அதிலே காய்ச்சிய பாலை ஊற்றி கிளறவும். பிறகு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். அவ்வப்போது நெய் ஊற்றிக் கொள்ளவும். பிறகு ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து ஏலக்காய் பொடி போட்டு இறக்கி வைத்து விடவும்.

திருப்திகரமாக வந்திருந்தது. 



இரண்டு நேயர் விருப்பம் என்று தலைப்பில் உள்ளதே என்று கேட்கிறீர்கள் அல்லவா?

நேரம் இல்லாத காரணத்தால் இதனை பதிவு செய்யவில்லை. வெள்ளி அன்று போளூர் ஆண்டுப் பேரவைக் கூட்டம். கூட்டம் முடிந்து சிற்றுண்டி சாப்பிடுகையில் போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கர், "நீங்க சமையல் போட்டு ரொம்ப நாளாச்சு தோழர்" என்றார்.

அவரது குறையையும் இப்போது தீர்த்து விட்டேன்.


 

2 comments:

  1. Com, I too also try to prepare this dish..

    ReplyDelete
  2. முயற்சியுங்கள் தோழர். சுலபம்

    ReplyDelete