Thursday, September 21, 2017

தேசிய கீதம் தெரியாட்டி குத்தமாய்யா?



ரஷ்யா போன போது தேசிய கீதம் ஒலிக்கையில் அதை கண்டு கொள்ளாமல்  மோடி போய்க்கொண்டே இருந்து விட்டார் என்று கீழே உள்ள வீடியோவை அனுப்பி பலரும் நையாண்டி செய்கிறார்கள்.



பாவம் மோடி.

சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூவர்ணக் கொடியையோ  தேசிய கீதத்தையோ, அரசியல் சாசனத்தையோ ஏற்கவேயில்லை.  அதனால் பாவம் மோடிக்கு ஜனகன தான் இந்தியாவின் தேசிய கீதம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ரஷ்யர்கள் ஏன் பாட்டாக பாடாமல் இசையை மட்டும் கொடுத்தார்கள். அதனால் அது ஏதோ அவரை வரவேற்பதற்கான பின்னணி என்று நினைத்துக் கொண்டிருப்பார்.

தென் ஆப்பிரிக்காவில் "ஜீ பூபாம்பா" என்றெல்லாம் மந்திரம் சொல்லி ஒரு பெண்மணி வரவேற்றது நினைவில் உள்ளதல்லவா? அது போல ஏதோ ஒரு இசை என்று நினைத்திருப்பார். 

பிரதமராக இருந்து கொண்டு மக்களுக்காக உருப்படியாக எதுவும் செய்யவில்லை. இனிமேலும் செய்யப் போவதில்லை. மாட்டின் பெயரால் கொலை, ஜி.எஸ்.டி யின் பெயரால் வழிப்பறி, அன்றாடம் பெட்ரோல் விலை உயர்வு, இப்படி எத்தனையோ குற்றம் செய்து விட்டார். அதை விட பெரிசாய்யா இது?

ஏதோ சாதாரணமான ஆள் மாதிரி சினிமாக்கு போயிருந்தாலாவது தெரிஞ்சிருக்கும். அதானிக்கும் அம்பானிக்கும் முறைவாசல் செய்யவே அவருக்கு நேரம் பத்தலை.  


உனக்கு கல்யாணமாச்சா இல்லையா என்ற கேள்விக்கே ஒழுங்கா பதில் சொல்ல முடியாத ஒரு ஆளுக்கிட்ட தேசிய கீதம் தெரியாதா என கேட்கறதுதான் குத்தம்.  


2 comments:

  1. சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூவர்ணக் கொடியையோ தேசிய கீதத்தையோ, அரசியல் சாசனத்தையோ ஏற்கவேயில்லை****** congis and comrades (offspring of Goebbels) purposefully spread such canards. Such secular history lies will never become true.

    ReplyDelete
    Replies
    1. பொய்யென்றால் நிரூபியுங்கள் பெரியவரே.
      காட்டிக் கொடுத்த கயவர் கூட்டத்துக்கு ரோஷம் வேற!!!!

      Delete