Wednesday, September 6, 2017

தியான நடிகருக்கும் சபத நாடகத்திற்கும் மட்டுமே . . .




திரைப்படங்களில் நடித்தவர் அவர்.

அதனால்தான் அவரை
அடக்கம் செய்த சமாதியில்

அமைதியாய் தியானம் 
செய்வதாய் நடித்தார் ஒருவர்.

ஓங்கி அடித்து
சபதம் செய்வதாய்
நடித்தார் இன்னொருவர்.

பிரிந்தோம் சேர்ந்தோம்
என பாச வேஷம் கட்டி
நடித்தார்கள் இருவர்.

நாடக அரங்கமாய்
மாற்றப்பட்ட இடத்தில்
நடிகர்கள் கோலோச்சிய இடத்தில்

நேர்மையாக குரலெழுப்பி
நியாயத்திற்கு போராடினால்
ஏவல்துறை வரத்தான் செய்யும்!

சமாதி அமைந்த கடற்கரையில்
ஓயாத அலைகள் போல
அடக்குமுறைகள் தொடர்ந்தாலும்
மாணவர்கள் போராட்டம் நிற்காது. 

வாழ்த்துக்கள் தோழர்களே!!!!
 

 

1 comment:

  1. நாடக அரங்குதான். கூறியவிதம் அருமை.

    ReplyDelete