Tuesday, October 17, 2017

இதுதான் ஆன்மீகப் பணியா, சமூகப் பணியா ஓ.பி.எஸ்?





தன் மதத்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு மாற்று மதத்தினர் மீதும்  மத நம்பிக்கை இல்லாதவர்கள் மீது வெறுப்பை உருவாக்குவது,

பொதுக்கூட்டங்களில் மாற்று மதத்தவரை வெறித்தனமாக தாக்கிப் பேசி அவர்களை மோதலுக்கு வரவழைக்க வித்திடுவது,

மனிதரைப் பிரிக்கும்  மனு தர்மத்தை  உயர்த்திப் பிடித்து  தீண்டாமைக் கொடுமைக்கு ஆதரவாக இருப்பது,

பிள்ளையார் சிலைகள் மூலம் தமிழகமெங்கும் கலவரத்தை தூண்டி விடுவது. 

இவையெல்லாம்தான் ஆன்மீகப் பணியா, சமூகப் பணியா என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் “தர்ம யுத்தம்” ஓ.பன்னீர்செல்வம்  அவர்களே.

“வீர (!) த் துறவிக்கு நீங்கள் அனுப்பிய வாழ்த்து மடலில்  அப்படித்தான் சொல்லியுள்ளீர்கள்.



நீங்கள் முழுமையான காவியாக  மாறி விட்டது  நன்றாகவே புரிகிறது.

1 comment:

  1. பச்சோந்திகள் இடத்திற்கு தகுந்தார் போல கலரை மாற்றிக் கொள்ளும் பன்னிரும் அப்படிதான்

    ReplyDelete