Wednesday, November 1, 2017

அராஜகத்தை தடுக்க துப்பில்லாவிட்டாலும் கூட . . .






நேற்று காவிகளின் ரௌடிகள் அமைப்பான ஏ.பி.வி.பி குண்டர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு கலவரம் செய்ய வந்து செங்கொடியையும் எரித்தார்கள்.

அந்த அராஜகத்தைக் கண்டித்து தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஆனால் வேலூரில் மட்டும் காவல்துறை அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை கைதும் செய்துள்ளது. 

காவிகள் அராஜகம் செய்வதை தடுக்க துப்பில்லாத காவல்துறை அதைக் கண்டித்து நடக்கும் போராட்டத்தை மட்டும் தடுக்க முயல்கிறது.

காவிகளின் பினாமிதான் தமிழக ஆட்சி என்பதை எடுபிடி எடப்பாடி மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளது. 

9 comments:

  1. See the comments

    http://aarurbass.blogspot.com/2017/11/blog-post.html?m=1

    ReplyDelete
  2. காவி அரசே உனக்கு மன சாட் சி இல்லையா
    இப்படியா கம்யூனிச போராளிகளை புரட்டி புரட்டி அடிப்பாய்
    ஏன்னா அடி
    கதறி கெஞ்சி கேட்டும் கூட நிறுத்தலையே விடாமல் அடிச்சசு புரட்டி எடுத்திருக்காய்

    ReplyDelete
    Replies
    1. என்ன பெரிய காமெடின்னு நினைப்பா கோழையே?
      கையில் உள்ள கொடியை திருப்பிப் பிடிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
      அப்போது காக்கிகளும் காவிகளும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடப் போகிறீர்கள்.
      ஒரு கமெண்டையே பெயரோடு போட துப்பில்லாத அனாமதேயம் நீ.
      நீ எல்லாம் நக்கல் பேசறியா?
      தைரியம் இருந்தா யார் என்று சொல்லி எழுது

      Delete
    2. உங்கள் முகவரியை அனுப்பி வைத்தால் வலி போக்கும் எண்ணெய் அனுப்பி வைப்பேன்

      முக்கிய குறிப்பு
      நான் காவி அல்ல ... ஆனால் கம்யூனிச போராளிகளை பிடிக்காது
      மோடியை கேவலமாக விமர்சித்துள்ளேன்
      கம்யூனிச வாதிகள் பிழைப்புக்காக இப்போ செயல்பட்டு வருவதால் அவர்களை விமர்சிக்கின்றேன்

      நிலவழகன் சுப்பையா

      Delete
    3. பிழைப்புவாதிகள் என்பது உங்கள் மனதின் கோளாறு.
      மக்களின் பிழைப்பு பாதிக்கப்படக்கூடாது என்று
      போராடுபவர்களை நையாண்டி செய்வது
      வக்கிர சிந்தனை

      Delete
  3. தொண்டர்கள் அப்படி இருக்கலாம்
    ஆனால் தலைவர்கள் அப்படி அல்ல
    சிறந்த உதாரணம் தா பாண்டியன்
    அன்று கம்யூனிச கட் சி 3 ஆம் அணியாக பிரிந்து தேர்தலில் போட்டியிடாவி ட் டால் திமுக தோற்றிருக்காது
    தமிழகத்துக்கு இந்த கேவலமான நிலை வந்திருக்காது
    கலைஞர் மீண்டும் முதல்வர் ஆகி இருப்பார்

    ReplyDelete
    Replies
    1. ஒரு தனி நபரை வைத்து இயக்கத்தை கொச்சைப்படுத்துவதும்
      அராஜகத்தை கண்டிக்காமல் நையாண்டி செய்வதும் சேடிஸம் தவிர
      வேறெதும் இல்லை

      Delete
    2. ஒரு சில தொண்டர்களின் , அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை வைத்து கொண்டு மாபெரும் மக்கள் இயக்கமான திமுகவை கம்யூனிச போராளிகள் , தலைவர்கள் இழுவுபடுத்தவில்லையா ?
      கலைஞர் போல் ஒரு மாபெரும் தலைவன் இனிமேல் தமிழினத்துக்கு கிடைக்குமா ?

      நிலவழகன் சுப்பையா

      Delete
    3. தனிப்பட்ட முறையில் கம்யூனிஸ்டுகள் என்றைக்கும் யாரையும் இழிவுபடுத்தியது கிடையாது. அந்த பாரம்பரியம் யாருடையது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

      தனிப்பட்ட ஒருவரை நம்பிய இயக்கமும் நாங்கள் கிடையாது.

      Delete