Friday, December 29, 2017

விழிகளில் துளிர்க்கும் நீரோடு



விழிகளில் துளிர்க்கும் நீரோடு
விடை கொடுக்க வருகிறோம்.

இத்தனை நாங்கள் எங்களை

வழிநடத்திய உங்களை 
இறுதியாய் காண வருகிறோம்.

சமதர்ம சமுதாயம் படைக்க
போராட்ட உணர்வூட்டிய உங்களை
போய் வாருங்கள் என
வழியனுப்ப வருகிறோம்.

எல்.ஐ.சி யை பாதுகாக்கும் 
யுத்தியைத் தந்தீர்கள்,
மக்களின் நிறுவனத்தை
மக்களே காப்பார்கள் என்றீர்கள்.
உங்களைக் காக்கும் 
வழிமுறையை மட்டும்
மறைத்து விட்டீர்கள்.

இறப்பு இயல்புதான் என்று
நீங்கள் கற்றுக்கொடுத்த
வாழ்க்கை முறை சொன்னாலும்
உங்களின் இழப்பை ஏற்க
இதயம் மறுக்கிறதே!

தோற்றம் மட்டுமா?
உங்கள் வாழ்வே கம்பீரம்!
உழைக்கும் மக்களுக்காய்
வாழ்வை அர்ப்பணித்த கம்பீரம்!

என்.எம்.எஸ் எனும்
மூன்றெழுத்துக்கு
"கொள்கை" என்றோர் பொருளுண்டு,
அதிலே "உறுதி" என்றும் அர்த்தமுண்டு.

"வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும்"
எல்.ஐ.சி யின் முழக்கம் இது.

பணியின் போதும்
ஓய்வின் போதும்
ஊழியர்தம் வாழ்விற்கு
ஊதியமும் ஓய்வூதியமும்
உறுதி செய்த ஒளி விளக்கு நீங்கள்.

ஆயிரமாயிரம் விருட்சங்களை
உருவாக்கிய பின்பே
மண்ணுக்குள் செல்லும்
அபூர்வ விதை நீங்கள்.

மண்ணிருக்கும் வரை,
வானிருக்கும் வரை
எங்கள் இதயங்களில்
எப்போதும் இருப்பீர்கள்,





4 comments: