Wednesday, December 27, 2017

வெண்மணியில் புதக அநாகரீகம் – காவித் தொடர்பு?



வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப் போன இடத்தில் புதிய தமிழகம் கட்சியினர் “வெண்மணியை கைப்பற்றுவோம்” என்று அநாகரீகமாக கோஷமிட்டதாகவும் “ஜாதிய சக்திகளை தமிழ் மண்ணிலிருந்து வேரறுப்போம்”  என்று வாலிபர் சங்கத் தோழர்கள் பதில் முழக்கம் இட்டதும் நழுவிச் சென்றுள்ளனர் என்பதை பல தோழர்களின் பதிவிலிருந்து பார்க்க முடிந்தது.

நான் பார்த்த ஒரு காட்சியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் வெண்மணியில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வருகையில் எதிரில் எந்த ஆரவாரமும் இல்லாமல் ஜான் பாண்டியன், கூட ஒருவருடன் நடந்து வந்து கொண்டிருந்தார். இவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாகச் சொல்கிறார்களே, எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக வருகிறாரே, செங்கொடி இயக்கத்தின் இடம் என்பதால் தைரியமாக வருகிறார் போல என்று பேசிக் கொண்டோம்.

பிறகு  வெண்மணி ஆர்ச் கேட்டிலிருந்து எங்கள் வாகனத்தில் திரும்புகையில் தேவூருக்கு சற்று முன்பாக ஓவர் ஆரவாரம், அளப்பறையோடு புதிய தமிழகம் கட்சிக் கொடி கட்டிய சுமார் பத்து வாகனங்கள் எதிரில் வெண்மணி நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனால் எங்கள் வாகனத்தை கொஞ்சம் நிறுத்த வேண்டியிருந்தது.

அவர்கள் வந்த வாகனங்களும் நின்றது. அப்போது சாலையில் ஒரு ஏழெட்டி பேர் வெள்ளை சட்டை, காவி வேட்டியோடு நெற்றியில் செந்தூரத்தோடு நின்று கொண்டிருந்தனர். முதல் வாகனத்தில் அமர்ந்திருந்தவர் காதிலே இந்த காவி வேட்டி பேர்வழிகள்  ஏதோ ஓதிக் கொண்டிருந்தார்கள். பிறகு மீண்டும் அதே ஆரவாரத்தோடு புதக வாகனங்கள் புறப்பட்டுப் போய் விட்டனர். அஞ்சலி செலுத்த செல்பவர்கள் போல அவர்களின் நடவடிக்கை இல்லவே இல்லை.

காவியோடு சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே வில்லங்கமாகத்தான் செயல்பட்டு வருகிறார். எனவே அவரது கட்சிக்காரர்களும் அப்படி செயல்படுவதில் எந்த வியப்பும் கிடையாது.

கலவரம் செய்து குழப்பம் ஏற்படுத்தி அதிலே மீன் பிடிக்க ஆசைப்படும் காவிகளின் ஆலோசனையால்தான் ஒரு வேளை புதக அப்படி அநாகரீகமாக நடந்து கொண்டிருக்குமோ என்று தோன்றுகிறது.

நவீன ஆண்டைகளாக தங்களைக் கருதிக் கொள்ளும் கிருஷ்ணசாமி வகையறாக்களுக்கு  வெண்மணியில் மாண்ட உழைப்பாளி மக்கள் மீதென்ன திடீர் பாசம்?


காவிகள் பாணியில் கலவரத்தைத் தூண்டுவதா?

பி.கு : இந்த ஆண்டு வெண்மணியில் வேலூர் கோட்டத் தோழர்கள்

9 comments:

  1. Krishnaswamy oru manusane illa. Don't bother comrades

    ReplyDelete
  2. I feel guilty of Krishnaswamy because a note "Pallan" in my transfer certificate as Krishnaswamy claims himself as Pallan. I gate caste,

    ReplyDelete
  3. தலித்களையும் காவி என்று சொல்லி தனது தலித் விரோத புத்தியை காட்டி விட்டார் காம்ரேட்

    நீங்கள் சொன்ன காட் சிக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா ?
    இருக்காது
    ஆனால் அவதூறு சொல்வீர்கள் தலித் மீது .. இதையே சூத்திர திமுக மீது வைத்திருந்தால் நரகத்தை காட்டி இருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கல் பின்னூட்டம் அபத்தமானது. காவிகளுக்கே உரிய ஆபத்தான திசை திருப்பும் சதிச்செயல்.

      நான் கண்ணால் பார்த்த காட்சிக்கு நானே ஆதாரம்.

      இந்த பதிவு டாக்டர் கிருஷ்ணசாமி வகையறா பற்றியது மட்டுமே. அவர்தான் தங்களை காவிகளோடு பிணைத்துக் கொண்டு தாங்கள் தலித் அல்ல, எஸ்.சி பட்டியலில் இருந்து எங்களை விடுவியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

      தலித் விரோதி நானில்லை, அவர்கள்தான்.

      என்னை தலித் விரோதி என்று சித்தரிக்க எங்களின் சில தோழர்களுக்கு மொட்டைக்கடிதம் அனுப்பியது, வேலூர் அம்பேத்கர் என்ற பெயரில் போலி முக நூல் கணக்கு தொடங்கி அவதூரு செய்தது என்று ஒரு அதிமேதாவி செய்த கீழ்த்தரமான முயற்சிகள் எல்லாம் ஏற்கனவே தோற்றுப் போய் விட்டது.

      எனவே Better Luck next Time.

      உங்கள் சதிகள் எப்போதும் தோற்றுப் போகும்.
      ஏனென்றால் உங்களைப் போன்ற சிறுமதியாளர்களிடம் எப்போதும் நேர்மை கிடையாது

      Delete
    2. "நவீன ஆண்டைகளாக தங்களைக் கருதிக் கொள்ளும் கிருஷ்ணசாமி வகையறாக்களுக்கு வெண்மணியில் மாண்ட உழைப்பாளி மக்கள் மீதென்ன திடீர் பாசம்?"
      .
      .
      வெண்மணியின் இறந்தவன் தேவேந்திரன் , கொலை செய்தவன் நாயக்கன்
      கிருஷ்ணசாமி தேவேந்திரன்

      கொலையாளியை ஆதரித்த ராமசாமி நாயக்கர் கட் சி கூட அஞ்சலி செலுத்தும் போது கிருஷ்ணசாமி செலுத்த கூடாதா ?

      தேவேந்திரன் என்றைக்கும் அடிமையாகத்தான் இருக்கணுமா ? ஆண்டானாக மாற கூடாதா ? தொழிலாளி என்றும் தொழிலாளியாகத்தான் இருக்கணுமா ? அவன் முன்னேறி வர கூடாதா ?
      தேவேந்திரன் கிருஷ்ணசாமி வளர்ச்சி எரிச்சலை தருகின்றதா ?
      முகவரி தாருங்கள் ஜெலுசில் அனுப்பி வைக்கின்றேன்

      சுரேஷ்குமார்

      Delete
    3. "நான் கண்ணால் பார்த்த காட்சிக்கு நானே ஆதாரம். :
      .
      எதை எதையெல்லாம் படம் எடுக்குறீங்க . அந்த போன் காமெராவால் அந்த காவிகளை படம் எடுக்க முடியலையா ?
      செந்தூரம் வைச்சிருந்தால் பிஜேபி காரனா?

      Delete
    4. "தலித் விரோதி நானில்லை, அவர்கள்தான்."

      கம்யூனிஸ்ட் எவ்வளவு தலித் விரோதிகள் என்பது அனைவருக்கும் தெரியும் . முடிந்தால் ஒரு தலித்தை பொலிட் பீரோவில் விட்டு பாருங்கள்

      Delete
  4. தன்னுடைய அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக தன் சமுதாயத்தை காவிகளிடம் அடமானம் வைத்துள்ள டாக்டர் கிருஷ்ணசாமியை நம்பும் உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

    மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு பரிதாபகரமான ஜீவனுக்கு விளக்கம் அளித்தால் புரியப்போவதில்லை என்பதால் உங்களுக்கு விளக்கம் சொல்லி
    என் நேரத்தை விரயமாக்கப் போவதில்லை

    ReplyDelete
  5. Krishnaswamy devendra Iyenkar building his own multi specialty hospital at tiruvanandhapuram with the support of central government. So he can sell/hire his own devendra slaves (very soon these devendra slaves convert to devendra Iyenkars with the support of central government). So cummies just stay apart!

    ReplyDelete