Thursday, January 18, 2018

அந்த குழந்தைகளை மீட்டிடுங்கள்


நித்தியின் அடியாட்கள் போல சில குழந்தைகள் பேசிய வீடியோவை பார்க்கும் துயரம் நேரிட்டது. உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியாகவும் ஆதங்கமாகவும் உள்ளது.

நித்தி ஒரு மோசமான மனிதன் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறைக்கு உள்ளே காலத்தைக் கழிக்க வேண்டிய ஒரு கிரிமினல் குற்றவாளி காவி உடை அணிவதன் மூலம் சமூகத்தில் தைரியமாக உலா வருகிறான். 

ஆஸ்ரமம் என்ற பெயரில் அங்கே பக்தி என்றோ வழிபாடு என்றோ எதுவும் நடப்பதில்லை என்பது நன்றாகத்  தெரியும்.  கூத்தடிப்பதற்கும் கொண்டாட்டத்திற்குமான இடமாகத்தான் அது இருக்கிறது 

சீடர்கள், சிஷ்யைகள் என்று அந்த மனிதனை மடத்தனமாக நம்பி வருகிறவர்களை மூளைச்சலவை செய்துள்ளான் என்பது நன்றாக தெரிகிறது. அதனால்தான் வயதுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் பேசுகின்றார்கள்.  பேச வைக்கப்பட்டுள்ளார்கள். 

இந்த போலியின் ஆஸ்ரமத்தில் அவர்கள் தொடர்ந்தால் நிச்சயம் அவர்கள் மன நோயாளிகள் ஆகி விடுவார்கள். கிரிமினல்களாக மாறுவதற்கான வாய்ப்பும் மிக அதிகம். ஹரியானா சாமியார் போல நாளை கலவரங்கள் நிகழ்த்தும் முன்பு இப்போதே தடுப்பது நல்லது.

எடுபிடி அரசு இதைச் செய்ய முன்வராது. 

அதற்கான அழுத்தத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் அளிக்க வேண்டும். முக்கியமாக ஆழ்நிலை தியானத்தில் இருக்கிற திமுக. 


2 comments:

  1. you are correct. very ubnormal behaviour from religion oriented team. looks dangerous to socitey too.
    need quick action.

    ReplyDelete
  2. அதிர்ச்சியூட்டும் செய்தி.

    ReplyDelete