Wednesday, January 24, 2018

தமிழ்த்தாயை அவமதித்தால் தவறில்லையா ராசா?



ஏதோ ஒரு புத்தக வெளியீட்டு விழா. அங்கே தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படுகிறது. தமிழகத்து ஆட்டுத்தாடி புரோஹித், ஹெச்.ராசா உட்பட மேடையில் உள்ள அனைவரும் எழுந்து நிற்கின்றனர்.

ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தனக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல ஆழ்நிலை தியானத்தில் இருப்பது போல ஒய்யாரமாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

ஆம், சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் பல்டியடித்ததால் விடுவிக்கப்பட்ட ஜூனியர் சங்கராச்சாரியார் விஜயேந்திரர்தான் அவர்.

என் தாய் ஆண்டாளை வைரமுத்து அவமதித்தார் என்று சொல்லி ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த ஹெச்.ராசாவே, இதோ உங்கள் கண் எதிரே விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்தாரே, எங்கே போனது உங்கள் நரகல் நாக்கு? தாயை இழிவுபடுத்திய விஜயேந்திரரைக் கண்டு உங்கள் ரத்தம் துடிக்கவில்லையா? அவர் தலையை மண்ணில் வீழ்த்த வேண்டும் என்றெல்லாம் உங்கள் கரங்கள் ஆர்ப்பரிக்கவில்லையா?

துடிக்காது, ஆர்ப்பரிக்காது, மனம் கலங்காது.

ஆம்.

சமஸ்கிருத மாதாவின் புத்திரர்கள் அல்லவா நீங்கள்?

ஆண்டாள் மீது மட்டும் பக்தி உண்டா என்ன உங்களுக்கு?

கலவரத்திற்கான கருவிதானே ஆண்டாள்!!!!!!!

3 comments:

  1. jaundiced red eyes

    ReplyDelete
    Replies
    1. சரிப்பா. அப்படியே இருக்கட்டும்.
      அந்த எஸ்கேப்ட் குற்றவாளி செஞ்சது தப்பா, சரியா?
      அதுக்கு பதில் சொல்லு

      Delete
  2. பொது மேடையில், விழாவில் வந்து தியானம் ? அது எப்படி தேசிய கீதம் பாடும் போது தியானம் கலைந்தது. சங்கராச்சாரியார் ஆகி நோகாமல் உலக இன்பங்களை அனுபவித்து வரும் போது தமிழுக்கு ஏன் மரியாதை என்று நினைத்து இருக்கலாம். அவர் சாப்பிடும் அரிசி கூட இங்குள்ள விவசாயியின் வேர்வையில் வந்தது என்று உணர்ந்து தமிழுக்கு உரிய மதிப்பு தர வேண்டுவது அவர் பொறுப்பு.

    ReplyDelete