Friday, March 23, 2018

இன்று. இன்றுதான் அந்நாள்



மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகியோர் இந்தியாவின் விடுதலைக்காக தூக்குக்கயிற்றைத் தழுவி வரலாற்றில் நிலை கொண்ட நாள் இன்றுதான்.

ஆம்.

மார்ச் மாதம் 23 ம் நாள்தான் அவர்கள் லாகூர் சிறையில் தூக்கிலப்பட்டார்கள்.

இளந்தியாகிகளை மட்டுமல்ல, அவர்களின் இறுதி நாளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் வேறொரு நாளில் வேறொரு வதந்தி பரவுகிறது.

கேளா காதுகள் கேட்கட்டும் என்று நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவன் பகத்சிங்.

இன்றும் நாடாளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு ஏழை மக்களின், தொழிலாளர்களின் விவசாயிகளின் குமுறலும் கேட்கவில்லை. அவர்கள் எழுப்பும் உரிமைக்குரலும் கேட்கவில்லை.

பகத்சிங்கின் குரலாய், உணர்வாய் நாம் மாறுவோம்.
கேளாக்காதினரை கேட்க வைப்போம்

No comments:

Post a Comment